நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் – நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் நீர்த்தேக்க அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நீதிமன்ற ஆணைப்படி அணைக்கட்ட கையப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று, நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து அதற்கு பூஜை செய்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அனைக்கு கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750-ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997 ஆம் ஆண்டு கையகப்படுத்தி 2000 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பு தொகை மற்றும் அதற்குண்டான வட்டியை சேர்த்து வழங்க வேண்டும் என 2019-ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால் சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டன.

ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து கோனாபுரம் கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து அதற்கு பூஜை செய்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் எனக் கூறி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...