சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் - ஈஷா கிராமோத்சவம் குறித்து வீடியோ மூலம்‌ சத்குரு அறிவுரை!

நம்‌ வாழ்க்கையில்‌ சுறுசுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும் என கிராமாத்சவம் விளையாட்டு வீரர்களுக்கு சத்குரு கூறியுள்ளார்‌.


கோவை: சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் என ஈஷா கிராமோத்சவம் குறித்த வீடியோவில்‌ சத்குரு அறிவுறுத்தியுள்ளார்.



இந்தியாவின்‌ மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15வது ஈஷா கிராமோத்சவம்‌ இன்று தொடங்குகிறது.



இது தொடர்பாக சத்குரு அவர்கள்‌ வெளியிட்டுள்ள விடியோவில்‌, நம்‌ பாரத கலாச்சாரத்தில்‌ வாழ்க்கையையே ஒரு விழாவை போல்‌ கொண்டாட்டமாக வைத்து இருந்தோம்‌.

நம்‌ தேசத்தில்‌ 365 நாட்களும்‌ ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும்‌. விழா என்றால்‌ வேலை செய்ய கூடாது. விடுமுறை எடுக்க வேண்டும்‌, அதிகமாக சாப்பிட வேண்டும்‌ என்பது அல்ல. எப்போது நீங்கள்‌ எல்லா செயல்களையும்‌ கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்‌.

நம்‌ கிராமங்களில்‌ உழவு செய்யும்‌ போது, நெசவு நெய்யும்‌ போது, சமையல்‌ செய்யும்‌ போது, குழந்தையுடன்‌ விளையாடும்‌ போது என எந்த செயல்‌ செய்தாலும்‌ அதில்‌ ஒரு பாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இருக்கும்‌.

எப்போது நம்‌ வாழ்வில்‌ இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம்‌ வரும்‌. நம்‌ வாழ்க்கையில்‌ சுறு சுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும்‌.

உங்களுடைய பாட்டி சீரியஸ்‌ ஆக இருக்கிறார்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌? அவர்‌ போவதற்கு தயாராகிவிட்டார்‌ என்று தானே அர்த்தம்‌. நீங்கள்‌ அப்படி ஆக கூடாது. எப்போதும்‌ சுறு சுறுப்பாகவும்‌ புத்துணர்வாகவும்‌ இருக்க வேண்டும்‌.

உங்களுக்குள்‌ விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும்‌ என்று அவசியம்‌ இல்லை. உங்கள்‌ விட்டிலேயே குடும்பத்தினருடன்‌ விளையாடி கொள்ளலாம்‌.

கிராமங்களில்‌ கூட இப்போது வெறும்‌ பணத்தை மட்டும்‌ கணக்கு போட்டு கொண்டு இருப்பதால்‌ மன அழுத்தம்‌ அதிகமாகிவிட்டது. சமூகங்களில்‌ ஜாதி, மதம்‌ என பல விதமான பாகுபாடுகள்‌ வந்துவிட்டது.

இதற்காக தான்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா. 2004-ம்‌ ஆண்டு இதை முதல்‌ முறையாக தொடங்கினோம்‌. இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்கி செப்‌.23-ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது. இகில்‌ 60,000-க்கும்‌ மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்‌ ஈடுபடுகிறார்கள்‌.

இவர்கள்‌ எல்லாம்‌ நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள்‌ கிடையாது. வீட்டில்‌ சமையல்‌ செய்யும்‌ பாட்டியும்‌ அவருடைய பேரன்‌ பேத்திகளும்‌ ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில்‌ விளையாடுகிறார்கள்‌.

இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில்‌ வேறு எங்கும்‌ இல்லை என கூறலாம்‌. அந்தளவிற்கு மிகப்‌ பெரிய அளவில்‌ மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில்‌ அனைவரும்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.

இப்போது நம்‌ பாரத தேசம்‌ பொருளாதாரத்தில்‌ முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில்‌ நம்‌ வாழ்வில்‌ விளையாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இல்லாமல்‌ போய்விட்டால்‌ பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...