போத்தனூரில் சிறப்பு குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் குடும்பம் (families for children) என்ற சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் என்ற முதியோர் இல்லம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாரர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: போத்தனூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லத்தில் மாவட்ட கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை போத்தனூரில் செயல்பட்டு வரும், குழந்தைகள் குடும்பம் (families for children) சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 24 பெண் குழந்தைகள் மற்றும் 19 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த காப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உணவு, அடிப்படை வசதிகள், கல்வி கற்பிக்கும் விதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, அங்கிருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.



அதனை தொடர்ந்து போத்தனூர் பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து அங்கிருந்த முதியோர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...