போத்தனூரில் சிறப்பு குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் குடும்பம் (families for children) என்ற சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் என்ற முதியோர் இல்லம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாரர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: போத்தனூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லத்தில் மாவட்ட கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை போத்தனூரில் செயல்பட்டு வரும், குழந்தைகள் குடும்பம் (families for children) சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 24 பெண் குழந்தைகள் மற்றும் 19 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த காப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உணவு, அடிப்படை வசதிகள், கல்வி கற்பிக்கும் விதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, அங்கிருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.



அதனை தொடர்ந்து போத்தனூர் பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து அங்கிருந்த முதியோர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...