திருமூர்த்திமலையில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை அமைக்கும் பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.



அதன்படி, தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு கொண்டார்.

இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராமராஜ், தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...