கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் - வருமானவரித்துறை அறிவிப்பு

கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் எனவும் இந்த தேதி கட்டாயம் நீட்டிக்கப்படாது எனவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவையில் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார், முதன்மை ஆணையர் திருமலைக்குமார், துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய கிருஷ்ணகுமார், மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவிப்பின் ஒரு கட்டமாக கருப்பு பணத்தை கணக்கில் காட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் வருகிற மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் கருப்பு பணம் குறித்த தங்கள் தகவல்களை வருமான வரித்துறையில் அளித்து அபராதம் மட்டும் செலுத்தி சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் இருந்து விளக்கு பெறலாம் எனக்கூறிய அவர் இந்த திட்டம் கட்டாயமாக மார்ச் 31க்கு பிறகு நீட்டிக்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

கடந்த 2 வாரங்களில் கோவை மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுகளை செய்துள்ளதாகவும் இதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். கருப்பு பணம் தொடர்பான தகவல்களை அளிக்க சலான் 287ஐ மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...