துடியலூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் பங்கேற்பு!

கோவை துடியலூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



கோவை: துடியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை துடியலூர் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். வட்டக் கழக செயலாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்வில் வெ.நா.பழனியப்பன் அருள்மொழி, சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள், கற்பகம், புஷ்பமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,



தமிழ்நாட்டில் விவசாயிகளின் தேவையை அறிந்து இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் இலவச மின் இணைப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர் மாணவியர் கல்வியை மேம்படுத்த காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம். பெண்களுக்கு இலவச பஸ் சேவை வசதி போன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



மாநில அரசின் நிதி வசதிக்கு ஏற்ப கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்க அரசு கவனத்துடன் ஆய்வு செய்து வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும்.

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாத நிலையில் சுமார் 300 கோடி மேல் பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே திமுக அரசை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



இந்த விழாவில் 10ஆம் வகுப்பு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 57 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பரிசு வழங்கப்பட்டன.



தொடர்ந்து 50 பெண்களுக்கு தையல் மெஷின், மற்றும் காது கேட்கும் கருவி வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தொ. ஆ. ரவி ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், கிருஷ்ண குமார், மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் டி.பி சுப்பிரமணியன் சண்முக சுந்தரம். பகுதிகழக பொருளாளர் ராக்கிமுத்து, மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...