கோவையில் மடத்தின் நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை சூலூர் அடுத்த எஸ்.குமாரபாளையம் பகுதியில் மருத்துவர் சமூக நலச்சங்கத்திற்கு சொந்தமான மடத்தின் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: சூலூர் அருகே மருத்துவர் சமூக நலச்சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சமூக நலச்சங்கத்திற்கு சொந்தமான மடத்தின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், துணை தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

சூலூர் வட்டம் எஸ்.குமாரபாளையம் கிராமம் மலையடிபாளையம் கிராமத்தில் எங்கள் சமூகத்திற்கு சொந்தமான பொதுமடம் செயல்பட்டு வருகிறது.

நூற்றாண்டுகளுக்கு முன் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்த மடத்தின் ஒரு பகுதி நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.

எனவே அந்த நிலத்தை முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...