திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக பாஜக மனு!

திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றி தரவில்லை எனில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆடி அமாவாசை அன்று படையலிட்டு திதி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை மீட்டு தராமல் உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டி அம்மன் துறை பகுதியில் உள்ள இந்துக்களின் சுடுகாடு சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு புதைக்கப்பட்டவர்களுக்கு திதி கொடுக்கச் சொல்லும்போது முகம் சுழிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பக்கத்தில் உள்ள இறைச்சி கடைக்காரர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை அங்கேயே வெட்டுவதால் வழிபாடு செல்வதற்கு இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.



எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

போர்க்கால அடிப்படையில் அதனை சரி செய்து தரவில்லை எனில் ஆடி அமாவாசை தினத்தன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகத்திலேயே படையலிட்டு திதி கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.



மேலும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் வெண்கல அம்பேத்கர் சிலை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தியும் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...