தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்!

தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை முதல் அமராவதி ஆறு வரை ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் அமராவதியை வரவேற்கும் விழாவாகும்.

இதனையொட்டி, தாராபுரம் அமராவதி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருள்களை வைத்து அமராவதி தாயை வழிபட்டனர். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.

இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.



500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை வீதி டி.எஸ் கார்னர் பெரிய கடை வீதி எண்பேட்டை 5 சாலை சந்திப்பு வழியாக அமராவதி ஆற்றை வந்து அடைந்தனர்.



அங்கு அவர்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை அமராவதி ஆற்றில் விட்டனர்.



அமராவதி ஈஸ்வரன் கோவிலில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் முருக பெருமானை பற்றி பாடி வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.



அதனைத் தொடர்ந்து அங்கு விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு இருந்தது அங்கே ஏராளமான குழந்தைகள் சிறுவர்கள் பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.



முளைப்பாரி ஊர்வலத்தின் போது இளைஞர்கள் ட்ரம் செட் அடித்து ஆட்டம் பாட்டம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...