குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி குண்ட திருவிழா - ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கோவை குறிச்சியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவையொட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை: கோவை குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை குறிச்சி பகுதியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஆடி மாதத்தை முன்னிட்டு குண்டம் இறங்கும் திருவிழா முக்கிய நிகழ்வாக அமையும்.

அதன்படி இந்த ஆண்டும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொங்காளியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகங்கள் புறப்பட்டு மாகாளியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் வந்தனர்.



பின்னர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...