பல்லடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி துணை ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு!

பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் குடிமகன்களால், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பாளையம் சாலையில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இக்கடையில் மதுபாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் கடை முன்புள்ள சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பாட்டிலை திறந்து வெட்டவெளியில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதோடு அநாகரீகமாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த பகுதியில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இங்கு பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள் அங்குள்ளவர்களுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாகவும், பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், இந்த மாதம் 8 ஆம் தேதி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.



இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி துணை ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...