தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு - கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாயிண்ட் பாரம் ஆப் மூவ்மெண்ட் ஆப் எஜுகேஷன் (jfme) என்பது பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், ஓய்வு பெற்றோர் அமைப்புகள், மாணவர் வாலிபர் அமைப்புகள் இணைந்து உயர்கல்வியின் வளர்ச்சிக்காக இந்திய அளவில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். அகில இந்திய அமைப்பின் இணைந்துள்ள உறுப்பு சங்கங்கள் கோரிக்கை அட்டை அணிந்து பேராசிரியர்கள் கல்லூரி வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய கோரிக்கையாக தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு 11.1.21 அன்று வெளியிட்ட அரசாணை எண் 5 முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...