பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டமாகிய பறையாட்டக் கலை

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாது பறை கலையாட்டம். அழிவின் விழிம்பில் உள்ள இக்கலையாட்டத்தை மீட்டெடுக்க வேண்டி பல்வேறு தமிழ் அமைப்பினர், நாடகக் கலைஞர்கள் பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். மேலும், அதனை தமிழ் கல்லூரிகளில் பாடத்திட்டமாக்க வேண்டும் என்னும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அத்தகைய கோரிக்கைகளின் வெற்றியாக தற்போது பறையாட்டக் கலை பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேரூர் தமிழ்க்கல்லூரியில் வளர்சீர் கயிலை சமுதாயக் கல்லூரியின் வழியே பறையாட்டக்கலை பட்டய படிப்பிற்கான வடிவம் தற்போது பெறப்பட்டுள்ளது.

தமிழுக்க என தனியொரு கல்லூரியில் பறைக்கென ஒரு பாடத்திட்டம் உருவாகியிருப்பது  அனைத்து பறை கலைஞர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பறை பயிற்சி பட்டறைக்கும், பறை இசைப்பள்ளிக்குமான இடமளித்து ஊக்கமளித்து தமிழும், கலையும் நிறைந்திருக்கும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.ந.தங்கராசு மற்றும் ஆசிரியர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இப்பறையாட்டக் கலை பட்டய சான்றிதழ் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் வழங்கப்படும். இதில் சேர 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் நகல் மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் பாரதியார் பல்கலைக் கழகத்தினை அனுக வேண்டும். இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9659277222, 9944952893 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...