பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டமாகிய பறையாட்டக் கலை

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாது பறை கலையாட்டம். அழிவின் விழிம்பில் உள்ள இக்கலையாட்டத்தை மீட்டெடுக்க வேண்டி பல்வேறு தமிழ் அமைப்பினர், நாடகக் கலைஞர்கள் பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். மேலும், அதனை தமிழ் கல்லூரிகளில் பாடத்திட்டமாக்க வேண்டும் என்னும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அத்தகைய கோரிக்கைகளின் வெற்றியாக தற்போது பறையாட்டக் கலை பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேரூர் தமிழ்க்கல்லூரியில் வளர்சீர் கயிலை சமுதாயக் கல்லூரியின் வழியே பறையாட்டக்கலை பட்டய படிப்பிற்கான வடிவம் தற்போது பெறப்பட்டுள்ளது.

தமிழுக்க என தனியொரு கல்லூரியில் பறைக்கென ஒரு பாடத்திட்டம் உருவாகியிருப்பது  அனைத்து பறை கலைஞர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பறை பயிற்சி பட்டறைக்கும், பறை இசைப்பள்ளிக்குமான இடமளித்து ஊக்கமளித்து தமிழும், கலையும் நிறைந்திருக்கும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.ந.தங்கராசு மற்றும் ஆசிரியர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இப்பறையாட்டக் கலை பட்டய சான்றிதழ் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் வழங்கப்படும். இதில் சேர 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் நகல் மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் பாரதியார் பல்கலைக் கழகத்தினை அனுக வேண்டும். இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9659277222, 9944952893 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...