தையல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஓய்வூதியத்தை ரூ.3,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அனைத்து விதமான பண பயன்களையும் உயர்த்தி வழங்க வேண்டும், ஆன்லைன் சர்வர்களில் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்திட வேண்டும். அனைத்து பண பயன்களும் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தையல் கூட்டுறவு சங்கத்தில் தமிழக அரசின் இலவச சீருடை தைக்கும் தையல் தொழிலாளர்களுக்கு எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அமைப்பு சாரா சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...