உடுமலையில் பிரதமர் மோடியின் படத்தை உடைக்கும் மர்ம நபர் - வைரலாகும் வீடியோ!

உடுமலை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவரான பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படம், பாஜக கொடி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: உடுமலை அருகே பிரதமர் மோடியின் புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் உடுமலை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவராக இருந்து வருகிறார்.



இந்நிலையில் இவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை உடைத்தும், கட்சி கொடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.



இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்டம் தழுவிய அளவில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மர்ம நபர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை உடைத்து சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...