வால்பாறை அருகே நீர்தேக்க தொட்டியில் கடமான் விழுந்து பலி!

அக்காமலை பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடமானின் உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்து உடலை புதைத்தனர். மேலும் மற்ற விலங்குகள் துரத்தியதால், கடமான் தவறி விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதியில் நீர்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை பகுதியில் நீர்தேக்க தொட்டி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வரும் ஆறு கருமலை எஸ்டேட் பகுதியில் நீர் தேக்கப்பட்டு குடிநீராக வால்பாறை பகுதிக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நீர்த்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தண்ணிரில் விழுந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாக 12 வார்டு உறுப்பினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது,

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் நீர்தேக்க தொட்டி அருகே சென்று பார்த்தபோது கடமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. மேலும் வால்பாறை நகராட்சி பொறியாளர் தலைமையில்.



தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தீ அணைப்பு துறையினர் தண்ணீரில் சென்று கடமானின் உடலில் கயிறு கட்டி தண்ணீரில் இருந்து உடலை மீட்டனர்.

வனப்பகுதி அருகே செந்நாய் மற்றும் சிறுத்தைகள் கட மானை வேட்டையாட துரத்திச் செல்லும் பொழுது தண்ணீரில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் கட மானின் வயது 5 இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த கடமானை உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...