கோவை ‘இதயங்கள்’ அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது - சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்!

தமிழ்நாடு முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் கோவையை சேர்ந்த இதயங்கள் அறக்கட்டளைக்கு சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி, சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது வழங்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது கோவையில் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையில் செயல்படும் 'இதயங்கள் அறக்கட்டளைக்கு' வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் 2023-ம் ஆண்டு சிறந்த மருத்துவ சேவைக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது.

தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவைக்காக கோவையில் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதனுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விருது வழங்கி பாராட்டினார்.

மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையின் கீழ் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உயர்தர இன்சுலின், சர்க்கரை பார்க்கும் குளுக்கோமீட்டர் சாதனம், இன்சுலின் பம்ப், வலி குறைவான 4 எம்எம் ஊசி, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல உதவிகள் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது, கோவையில் தொடங்கிய இதயங்களின் பணி இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்துடன் (தமிழ்நாடு பிரிவு) இணைந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட காரணமாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விருது இதயங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமான "தமிழகத்தில் முதல் வகை சர்க்கரை குறைபாடு கொண்ட ஒரு குழந்தை கூட தரமான மருத்துவமின்றி இன்னல் படக்கூடாது" என்ற உயர் எண்ணத்திற்கு ஒரு ஊன்று கோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் வகை சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த 20 வயதுக்குட்பட்டவர்கள் உதவி பெற, இதயங்கள் அறக்கட்டளையை 9042858882 என்ற எண்ணிலும், இதயங்களின் வலைத்தளம் www.idhayangal.org -லும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...