நமக்கு நாமே திட்ட பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் நமக்கு நாமே திட்ட பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.



கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 24 வது வார்டுக்கு உட்பட்ட டைட்டில் பார்க் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால், புதிய தார்சாலை அமைத்தல், சாலை தடுப்பு அபிவிருத்தி பணிகள் செய்தல் மற்றும் நடைபாதை தளங்களுக்கான அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி மேயர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...