தாராபுரம் அருகே அரிசி ஆலையில் இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது!

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் சமீபத்தில் திருட்டு போனது. இது குறித்து அரிசி ஆலையின் மேலாளர் செந்தில்நாதன் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தாராபுரம் உதவி காவல் ஆய்வாளர் கருப்புசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) மற்றும் இவரது கூட்டாளிகளான தீனா (23), கவுதம் (23) ஆகிய 3 பேர் இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.



இதில் தில்லைமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இவரிடமிருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவரது கூட்டாளிகளான கவுதம் மற்றும் தீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...