திருப்பூரில் இரவில் பூத்த பிரம்ம கமல பூக்கள் - பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு!

திருமுருகன்பூண்டி அடுத்த தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன் என்பவரது வீட்டில் பூத்துள்ள நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.



திருப்பூர்: திருமுருகன்பூண்டி அருகே பூத்துள்ள பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன்.



இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டில் இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்ம கமல பூக்கள் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளது.



இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர்.



அதனை தொடர்ந்து பூக்களுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபாடு செய்தனர்.



மேலும், குழந்தை இல்லாதவர்கள் மருத்துவ குணம் நிறைந்த இந்த பூவை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் இந்த பூக்களை சாப்பிட்டனர்.



தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த பூக்களை வந்து பார்த்து சென்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...