கோவையில் பொருத்தப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் - சேவையை தொடங்கி வைத்த காவல் ஆணையர்!

கோவை மாநகரில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் முதல் முறையாக 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சேவையை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகர காவல்துறை சார்பில் 3 இடங்களில் அமைக்கப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளின் சேவையை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



கோவை மாநகரில் முதல் முறையாக அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் போக்குவரத்து விதியை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்தப்பட்டுள்ளது.



3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 வேக அளவீடு கருவி மூலம் வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அபராதமும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.



இந்த மூன்று இடங்களில் உள்ள தானியங்கி வேக அளவீடு கருவிகள், கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு துறையின் கட்டுப்பாட்டில் இயங்க உள்ளது.



தானியங்கி வேக கருவி மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் கண்டறியப்படும்.

இதனையடுத்து அந்த வாகன உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத சலான் அனுப்பி வைப்பதோடு, உடனடியாக அபராதத்தை செலுத்த வலியுறுத்தப்பட உள்ளது. விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு மாநகர போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...