கோவையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் - மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது!

மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் 9 பேர் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தல்‌ இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ மாமன்ற‌ கூடத்தில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த மறைமுக தேர்தலில்‌ வார்டு எண்‌.7, 9, 17, 38, 39, 43, 44, 47, 48, 56, 74, 75, 78, 85, 86, 90, 91, 95, 96, 97, 98 மற்றும்‌ 99 ஆகிய 22 மாமன்ற உறுப்பினர்கள்‌ தவிர 78 மாமன்ற உறுப்பினர்கள்‌ வருகை புரிந்தனர்‌. வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு 10 மாமன்ற உறுப்பினர்கள்‌ வேட்பு மனு தாக்கல்‌ செய்தனர்‌.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு போட்டியிட்ட 10 வேட்பாளர்களில்‌

வார்டு எண் 1 - ஆர்.கற்பகம்

வார்டு எண் 37 - குமுதம்

வார்டு எண் 69 - சரவணக்குமார்

வார்டு எண் 41 - கே.சாந்தி

வார்டு எண் 83 - வி.சுமா

வார்டு எண் 58 - சுமித்ரா

வார்டு எண் 45 - பேபிசுதா

வார்டு எண் 6 - பொன்னுசாமி

வார்டு எண் 76 - ராஜ்குமார்

ஆகிய 9 வேட்பாளர்கள்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்‌.



எனவே, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்‌.



இந்நிகழ்வில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌ அவர்கள்‌, மண்டல குழு தலைவர்கள்‌, மாமன்ற உறுப்பின்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...