கோவையில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் - ரயில்வே சங்கங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா!

தென்னக ரயில்வேக்கு வருவாயில் மூன்றாவது பெரிய பங்களிப்பை வழங்கும் கோயம்புத்தூரில் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அதற்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ரயில்வே சங்கங்களின் கோரிக்கை விடுத்துள்ளன.


கோவை: கோவையில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ரயில்வே சங்கங்களின் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவையில் புதிய ரயில்களை பராமரிப்பதற்கான பிட்லைன் மற்றும் ஸ்டேபிளிங் லைன் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை ரயில்வே வாரியம் மண்டல மற்றும் கோட்ட அதிகாரிகளிடம் கேட்கிறது. பராமரிப்பு வசதிகளில் உள்ள தடைகள் காரணமாக, கோயம்புத்தூரில் இருந்து புதிய ரயில்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த தடைகளை சமாளிக்க, தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம், இந்த உள்கட்டமைப்பை உருவாக்க கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் போத்தனூர் கூடுதல் பிட் லைன்கள், ஸ்டேபிளிங் லைன்கள் மற்றும் சில வசதிகளை முன்மொழிந்தது.

சேலம் கோட்டம், தெற்கு ரயில்வேயில் உள்ள தலைமையகத்துக்கு, விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக அனுப்பியது. இந்த திட்டத்திற்கான நிதி ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூருக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு வருவாயில் மூன்றாவது பெரிய பங்களிப்பை வழங்கும் கோயம்புத்தூரில் உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான ஒப்புதலை உடனடியாக அனுப்புமாறு தென்னக ரயில்வே பொது மேலாளரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.

இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை, செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்களும், பெங்களூரு, சென்னை எழும்பூர், காரைக்கால், திருச்செந்தூர், போடிநாயக்கனூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய ரயில்களும் இயக்கப்படும்.

நகரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்வது முன்கூட்டியே திட்டமிட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவது ரயில்வேயின் பொறுப்பு.

கோவையை பொருத்தவரையில் எதிர்பார்ப்பது நியாயம். ஏனெனில் அந்த அளவிற்கு ரயில்வேக்கு மட்டுமே இல்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு வருமானத்தை கொடுக்கிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...