மூலனூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.25 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!

மூலனூர் அடுத்த வண்ணாப்பட்டி ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 23.5 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ஜெயாதேவி முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மூலனூர் அருகேயுள்ள ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 23.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த கொமாரபாளையம் கிராமம் வண்ணாப்பட்டி ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 23.5 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ஜெயாதேவி முன்னிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.

அப்போது தனி தாசில்தார் மகேஸ்வரன், செயல் அலுவலர், ஆய்வாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ரங்கநாத பெருமாள் கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...