உடுமலையில் ஆசிய ஹாக்கி கோப்பை அறிமுகம் - அமைச்சர்கள் பங்கேற்பு!

உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழாவில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்பனா ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏழாவது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை அறிமுக விழா மற்றும் ஏழாவது ஆசிய ஹாக்கி போட்டியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.



பின்னர் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர் மாணவர்களின் சீர்மிகு அணிவகுப்பு செய்து காண்பிக்கபட்டது.



இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லட்சுமணன், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டல தலைவர் இலா.பத்மநாபன் மற்றும் திருப்பூர் மாவட்ட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...