ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்!

தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றிய மதிமுக சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூரில் மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பொறுப்பில் இருந்து திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், 1 கோடி கையெழுத்து இயக்கம் மூலனூர் ஒன்றிய அவை தலைவர் மாரிசாமி தலைமையில் நடைபெற்றது.



கையெழுத்து நிகழ்ச்சியை, மூலனூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி முன்நின்று துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் தமிழரசு, மதிமுக மூலனூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் ரத்தினசாமி, பேரூர் கழக செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட மதிமுக கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...