கோவையில் வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவர் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை அப்பநாயக்கன்பாளையம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் பக்கத்து வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஸ்ரீனிவாசன் என்பவரை தாக்கிய கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


கோவை: அப்பநாயக்கன்பாளையம் அருகே வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அப்பநாயக்கன்பாளையத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் ஸ்ரீனிவாசன், ஓட்டுனராக உள்ள இவரது வீட்டருகே குடியிருந்து வருபவர் கர்ணா மற்றும் கிஷோர். இவர்கள் இருவருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வீட்டருகே நின்று கொண்டிருந்த ஸ்ரீனிவாசனிடம் கர்ணா மற்றும் கிஷோர் அவர்களது நண்பர்களான வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அது கைலப்பாக மாறி 4 பேரும் சேர்ந்து ஸ்ரீனிவாசனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஸ்ரீனிவாசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீனிவாசன் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...