கோவையில் வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவர் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை அப்பநாயக்கன்பாளையம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் பக்கத்து வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஸ்ரீனிவாசன் என்பவரை தாக்கிய கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


கோவை: அப்பநாயக்கன்பாளையம் அருகே வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அப்பநாயக்கன்பாளையத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் ஸ்ரீனிவாசன், ஓட்டுனராக உள்ள இவரது வீட்டருகே குடியிருந்து வருபவர் கர்ணா மற்றும் கிஷோர். இவர்கள் இருவருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வீட்டருகே நின்று கொண்டிருந்த ஸ்ரீனிவாசனிடம் கர்ணா மற்றும் கிஷோர் அவர்களது நண்பர்களான வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அது கைலப்பாக மாறி 4 பேரும் சேர்ந்து ஸ்ரீனிவாசனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஸ்ரீனிவாசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீனிவாசன் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...