கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 1.15 கிலோ கஞ்சா பறிமுதல்!

பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபுல்யூ பாலம் அருகே போலீசாரின் ரோந்து பணியின் போது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், விஷ்ணு சங்கர் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். இந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப் பகுதியில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான காவலர்கள் பெரியநாயக்கன் பாளையம் எல்.எம்.டபுல்யூ பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், விஷ்ணு சங்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் அங்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...