கோவையில் மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாம் - ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை கெம்பட்டி காலனிக்கு உட்பட்ட ஒக்கிலியர் வீதி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவையில் நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாமை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிர் யாரும் விடுபட்டு விட கூடாது என முதலமைச்சர் கூறியிருந்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கெம்பட்டி காலனி ஒக்கிலியர் வீதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன், மண்டல குழு தலைவர் மீனாலோகு ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...