வால்பாறை அரசு மருத்துவமனையில் சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு!

வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அமுல் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போதிய மருத்துவர்கள் இல்லை என வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சென்று நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.



கோவை: வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மருத்துவர்கள் வேலை நேரங்களில் மருத்துவமனையில் உள்ளார்களா என்று ஆய்வு மேற்கொண்ட அவர், நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் வால்பாறையில் சிகிச்சைக்கு வரும் மக்களை பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்ப வேண்டாம்.



வால்பாறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



அப்போது வால்பாறை அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் மருத்துவமனை பணியாளர்கள் தேவை என்றும் மருத்துவர் மகேஷ் ஆனந்தி சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரிடம் இது சம்பந்தமாக புகார் தெரிவித்து வால்பாறை மருத்துவமனைக்கு அதிகப்படியான மருத்துவர்களையும் பணியாளர்களையும் நியமிக்க வலியுறுத்துவதாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இந்த ஆய்வின் போது நகர செயலாளர் மயில், பொன்.கணேசன், சுடர் பாலு, ஆடிட்டர் சண்முகவேல், எஸ்.கே.எஸ் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...