உடுமலையில் 72 வயது மூதாட்டிக்கு தொடை எலும்பு மாற்று சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை!

கன்ரோஸ் சார்கோமா என்ற ஒரு வகை எலும்பு புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த உடுமலையை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டி நடைபயிற்சி மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் தகவல்.



திருப்பூர்: உடுமலை அருகே 72 வயது மூதாட்டிக்கு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 72 வயது . மூதாட்டி கன்ரோஸ் சார்கோமா என்ற ஒரு வகை எலும்பு புற்று நோயினால் சில வருடங்கள் பாதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனைகளில் கீமோ தெரபி சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டார்.



அப்போது கோவை மருத்துவர்கள் கால் எடுக்க வேண்டும் என தெரிவித்த நிலையில் அவரது உறவினர்கள் ஆலோசனை செய்து உடுமலையில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.மோகன்ராஜை சந்தித்து அவருடைய மருத்துவ ஆலோசனை படி மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவர் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



இதுபோன்ற கடினமான அறுவை சிகிச்சைகள் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் உடுமலை மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை மருத்துவர் குழு, தலைமை மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.மோகன்ராஜ் தலைமையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மூதாட்டி நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...