உடுமலையில் 72 வயது மூதாட்டிக்கு தொடை எலும்பு மாற்று சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை!

கன்ரோஸ் சார்கோமா என்ற ஒரு வகை எலும்பு புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த உடுமலையை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டி நடைபயிற்சி மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் தகவல்.



திருப்பூர்: உடுமலை அருகே 72 வயது மூதாட்டிக்கு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 72 வயது . மூதாட்டி கன்ரோஸ் சார்கோமா என்ற ஒரு வகை எலும்பு புற்று நோயினால் சில வருடங்கள் பாதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனைகளில் கீமோ தெரபி சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டார்.



அப்போது கோவை மருத்துவர்கள் கால் எடுக்க வேண்டும் என தெரிவித்த நிலையில் அவரது உறவினர்கள் ஆலோசனை செய்து உடுமலையில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.மோகன்ராஜை சந்தித்து அவருடைய மருத்துவ ஆலோசனை படி மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவர் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



இதுபோன்ற கடினமான அறுவை சிகிச்சைகள் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் உடுமலை மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை மருத்துவர் குழு, தலைமை மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.மோகன்ராஜ் தலைமையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மூதாட்டி நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...