நிலத்தை அபகரித்ததாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தர்ணா!

கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று அபகரித்து கொண்டதாக கூறி, கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: தனது நிலத்தை அபகரித்து விட்டதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர், கொண்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் எல்ஜிபி என்ற தனியார் நிறுவனம் மோசடி செய்து அபகரித்து விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க அழைத்து சென்றனர்.

இது குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது, இது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, தனது நிலம் குறித்து நடவடிக்கை எடுக்கும் படி அறிவித்த நிலையில், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...