தொழில்துறை இடம் வழங்கினால் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு கட்டித்தர அரசு தயார் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

தொழில்துறையினர் இடம் அளித்தால் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், மின் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக திருப்பூரில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: மின் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் கொங்குநகர் அடுத்த அப்பாச்சி நகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, திறப்பு விழா இன்று நடந்தது.



தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது,



திருப்பூரில் தொழில்பேட்டை அமைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில்பேட்டைகளை அமைத்தால் மேலும் தொழில் வளர்ச்சி அடையும். தமிழ்நாடு தொடர்ந்து பின்னலாடை உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது.

இருப்பினும் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தொழில் துறையினர் ’டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்’ பக்கம் இங்குள்ள தொழில்துறையினர் நகர வேண்டிய தருணம் இது எனவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத்தில் தள்ளாடுவதால், அந்த ஆர்டர்களை நாம் பெறுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். டெக்ஸ்டெக், மெடிடெக், ஸ்போர்ட்ஸ் டெக், ஆக்ரோ டெக் ஆகியவற்றில் எதிர்காலம் சிறக்கும்.

தொழில்துறையின் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு முதல்வர் தனி கவனம் செலுத்த சொல்லி உள்ளார். ’டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்’ மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான புதிய ஆலோசனைகளை தொழில்துறை முழுமனதோடு வரவேற்கிறது.

தொழிலாளர்களுக்கு 5000 வீடுகள் கட்டித்தர கோரிக்கை வைக்கின்றனர். இடம் கிடைத்தால் நிச்சயம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ட்ரில்லியன் இலக்கை நோக்கி தமிழக முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு திருப்பூர் தொழில் துறையினர் உதவிகரமாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



பின்னலாடை துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் திருப்பூர் தொழில் துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான கோரிக்கைகள் ஒன்றிய அரசை சார்ந்ததாகவே உள்ளது.

அதனை உடனடியாக நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். திருப்பூர் பின்னலாடை துறையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தொழில்துறை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

மின் கட்டண உயர்வு தொடர்பான கேள்விக்கு, மின் கட்டண உயர்வு ஒன்றிய அரசின் கொள்கை, இதையும் அவர்கள் தான் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...