தாராபுரத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது!

தாராபுரம் அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிச் சென்ற தாராபுரம் சர்க்கரை மில் பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(22), சூர்யா பிரகாஷ்(20), ஹனுமந்தபுரத்தைச் சேர்ந்த கோபிநாத்(23) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செல்போன் திருடிய வழக்கில் 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த பச்சாம்பாளையம் அருகேயுள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் தேவேந்திரன்(30). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 15-ஆம் தேதி இரவு, வேலை முடிந்து வந்த பின், வீட்டுக்கு வெளியே தூங்கி உள்ளார்.

அப்போது, அங்கு வந்த சிலர் தேவேந்திரனின் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், தேவேந்திரனின் செல்போனை தாராபுரம் சர்க்கரை மில் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் தமிழரசன்(22), குப்புசாமி மகன் சூர்யா பிரகாஷ்(20), ஹனுமந்தபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் கோபிநாத்(23) ஆகிய மூவரும் சேர்ந்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...