வெள்ளகிணர் அருகே ரூ.186.34 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கும் பணி - அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்!

துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் ரூ.186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, அப்பகுதியில் வரும் 2 நகர பேருந்துகளை 4ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.



கோவை: துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் ரூ.186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

கோவை துடியலூர் அருகேயுள்ள வெள்ளகிணர் பகுதி 2-ல் மாநகராட்சியில் 1, 2, 26, 27 மற்றும் 28 ஆகிய வார்டுகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பகுதி செயலாளர் அருள்குமார் தலைமையில் நடந்த பூமிபூஜை நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், அவுசிங் யூனிட் பகுதி 2க்கு ஏற்கனவே வந்து கொண்டிருந்த நான்கு டவுன் பஸ்சில் தற்போது இரண்டு தான் வருவதாகவும், அதுவும் முக்கிய நேரங்களில் வருவதில்லை என்றும் பள்ளி மாணவர்கள் வசதிக்காக டவுன்பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், ஆணையாளர் பிரதாப், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், பகுதி கழக செயலாளர் சிவா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் ஆறுகுட்டி, மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி அருள்குமார், கற்பகம் ராஜசேகர், சித்ரா தங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து, அம்பிகா தனபால், சித்ரா வெள்ளியங்கிரி, கண்ணகி ஜோதிபாசு, நிர்வாகிகள் முன்னால் அவைத் தலைவர் வெ.நா.பழனியப்பன், பகுதி கழக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், இராக்கிமுத்து, அருண், சம்பத், தன்ராஜ் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சுப்ரமணியன், ரம்யா, வட்டக் கழக செயலாளர்கள் இராஜசேகரன், சண்முகம், சோமசுந்தரம், சுந்தரம். மற்றும் வட்டக் கழக பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...