சர்வதேச நீதி நாள் - உடுமலை பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்!

சர்வதேச நீதிநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் M.மணிகண்டன் மற்றும் K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சட்ட உதவி மைய சேவைகளை பெறுவது குறித்து எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: சர்வதேச நீதி நாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் வட்டசட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நேற்றைய தினம் (17.07.2023) "சர்வதேச நீதிநாள்"-ஐ முன்னிட்டு உடுமலைப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியான, M.மணிகண்டன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி, K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே இலவச சட்ட உதவி மையத்தின் சேவைகள் மற்றும் மக்கள் அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.



இதில் வழக்கறிஞர்கள், அப்துல்நாசர், செந்தில்குமார், மகேஸ்வரன், சத்தியவாணி, தம்பிபிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை சட்டம் ஒழுங்கு உதவி காவல் ஆய்வாளர்கள், சிவராஜ், தங்கவேல் பிற காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சட்ட சேவைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...