ஔவையாரின் கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி திருப்பூரை சேர்ந்த பெண் சாதனை!

திருப்பூரை சேர்ந்த மனோன்மணி என்ற பெண் ஔவையார் எழுதிய 91 வரிகள் கொண்ட கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளனர்.



திருப்பூர்: ஔவையார் எழுதிய கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடிய திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.



திருப்பூரைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண் சிறு வயது முதலே சிறிய சிறிய வார்த்தைகளை தலைகீழாக பேசி பல்வேறு நிலைகளில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.



இந்நிலையில் தனது அடுத்த கட்ட முயற்சியாக ஔவையார் எழுதி பாடிய கொன்றைவேந்தன் பாடலை முழுவதுமாக தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார்.



461 சொற்களோடு 91 வரிகள் கொண்ட பாடலை மூன்று நிமிடத்திற்குள்ளாக பாடி சாதனை படைத்த மனோன்மணிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய அமைப்பினர் சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளனர்.

இந்த நிகழ்வானது திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...