நவக்கரை அருகே இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை!

நவக்கரை அருகேயுள்ள வனப்பகுதியில் மற்றொரு விலங்குடன் நடந்த சண்டையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்த நிலையில், உடலை கைப்பற்றிய வனத்துறையினர் மருத்துவ குழுவினர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்த பின் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் நவக்கரை அருகே சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை அடுத்த அட்டமலை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை வனத்துறை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து இறந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இறந்த சிறுத்தை சுமார் 1.5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பதும், வேறு ஒரு வனவிலங்குடன்ஏற்பட்ட மோதலில் சிறுத்தையின் பின்பகுதியில் கடித்து இழுத்ததில் குடல் வெளியே வந்து உயிரிழந்தது தெரியவந்தது.



மேலும் சிறுத்தையின் உடலில் ஆங்காங்கே வேறு விலங்கின் நகத்தடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து இறந்த சிறுத்தை உடல் அதே அதிகாரிகள், வன ஆர்வலர்கள் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...