கவனக்குறைவாக சிகிச்சையளித்தால் ஒருவர் பலி - பல்லடம் அருகே செயல்பட்டு வரும் அக்குபஞ்சர் சென்டர் முற்றுகை!

பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் இருதய சிகிச்சைக்காக வந்த சம்பத் என்பவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக கூறி, அவர்களது உறவினர்கள் அக்குபஞ்சர் சென்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் கவனக்குறைவாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரிஷி அக்குபஞ்சர் சென்டர் என்ற மினி கிளினிக் ஒன்று கடந்த ஒராண்டிற்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த அக்குபஞ்சர் சென்டரில் பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பட்டேல் சாலை பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் இருதய அடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இதற்கு காரணம் இந்த மருத்துவர் ரிஷி என்ற சித்தார்த்தன் என்பவர் அஜாக்கிரதையான முறையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இறந்த சம்பத் (55) என்பவருக்கு ஆஞ்சியோ செய்த பிறகு சிகிச்சை கொடுத்ததாகவும், ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யாமல் போன் கூட எடுக்காமல் வெளிமாநிலத்தில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

அதனை நம்பி அவரும் காத்திருந்தததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுதொடர்பான பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...