உடுமலையில் 3 நாட்களாக நடைபெற்ற மலைவாழ் மக்கள் போராட்டம் வாபஸ் - ஆடி, பாடி கொண்டாட்டம்!

உடுமலை அருகே தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து மலைவாழ் மக்கள் 3 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12ஆம் தேதி மலைவாழ் மக்கள் திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை சாலை அமைக்க அனுமதி வழங்காத உடுமலை வனத்துறை மற்றும் 2006 வன உரிமை சட்டத்தை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தை உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இந்த நிலையில் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் 3வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.



இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட வன உரிமை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்கள் போராட்ட குழுவினர், வனத்துறையினர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் திருமூர்த்திமலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5.37 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



பின்னர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற பகுதியில் இனிப்புகள் வழங்கி மலைவாழ் மக்கள் பாரம்பரியமான இசைக்கருவிகள் இசைக்க மலைவாழ் மக்கள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்த மழைவாழ் மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. உடுமலையில் மலைவாழ் மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...