கோவையில் புதுமண தம்பதிக்கு சின்ன வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்!

கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிக்கு, அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம், மற்றும் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக அளித்துள்ளனர்.



கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹாலில் கணேஷ் -ஹேமா தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மணமகனின் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...