உடுமலையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.185க்கு விற்பனை - இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!

உடுமலை காய்கறி மார்க்கெட்டில் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.185க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், சின்ன வெங்காய விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



திருப்பூர்: உடுமலை காய்கறி மார்க்கெட்டில் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.185வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகின்றது. சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காதது சாகுபடி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் சின்ன வெங்காயம் உடுமலை சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து வருகின்றது. அதாவது கடந்த சில வாரங்கள் முன் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.



ஆனால் தற்போது, சந்தையில் இருப்பு வைத்த நன்கு உலர்ந்த வெங்காயம் தரத்திற்கு ஏற்ப ஏலம் முறையில் கிலோ 185 ரூபாய்க்கும், 40 கிலோ பை ரூ.7400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சமையலில் முக்கியமாக கருதப்படும் சின்ன வெங்காயம் அதிரடி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...