திருப்பூரில் தப்பிச்செல்ல முயன்ற தலைமறைவு குற்றவாளியை விரட்டிப்பிடித்த காவலர் - சிசிடிவி காட்சி வெளியீடு!

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன், திருப்பூர் ரயில் நிலையம் அருகே தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் ஒருவர் அவரை விரட்டி பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் விரட்டி பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் விரட்டி பிடித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், கடந்த 2003ஆம் ஆண்டு அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் 2013 ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் பாஸ்கரனை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் பாஸ்கரன் திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு அவரை பிடிக்க சென்றபோது போலீசாரை பார்த்த பாஸ்கரன் தப்பிச் செல்ல முயற்சித்தபோது அனுப்பர்பாளையம் காவலர் காளியப்பன் துரத்திச்சென்று பாஸ்கரனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.



இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...