உடுமலையில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலையில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஆகிய உபகரணங்கள் Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன.


திருப்பூர்: Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் உடுமலை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகரில் சிக்கந்தர் பாஷா வீதியில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 2014 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஒரு வருடத்திற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இந்த வருடத்திற்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...