கோவையில் மின்சார வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்டத்தில், அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மின் வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை கண்டித்து செஞ்சிலுவை சங்கம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில், மின்வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை கண்டித்து அனைத்தும் மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சோதனை அறிக்கைக்கு பதிலாக அனெக்சர் 1, 2, 3 கட்டாயம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும், மின் உரிமம் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்,

வீட்டு உரிமையாளர்கள், சிவில் இன்ஜினியர்கள், மேஸ்திரிகள் மின் உரிமம் பெற்ற வயரிங் கான்டிராக்டர்களின் மேற்பார்வையில் மட்டுமே மின்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாத கட்டிடத்திற்கு மின் இணைப்புகளை வழங்கக் கூடாது,

உரிமம் புதுப்பிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும், உரிமம் வழங்குதல் புதுப்பித்தல் போன்றவற்றை ஆன்லைன் முறையில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், 42 அடி உயரம் உள்ள வீட்டுமனை கட்டிடங்களுக்கும் 2000 சதுர அடி வரை உள்ள வணிக கட்டிடங்களுக்கும் Completion Certificate இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

ISI மற்றும் ISO தரச் சான்றுள்ள Duplicate இல்லாத மின் சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதுகட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள், பிளம்பர்கள், ஹெல்பர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...