உடுமலை அருகே பாம்பு கடித்து மலை கிராமப் பெண் காயம்!

உடுமலை அடுத்துள்ள குழிப்பட்டி என்ற மலை கிராமத்தில் பெண் ஒருவரை பாம்பு கடித்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் இயற்கையான முறையில் பசுமருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குழிப்பட்டி மலை கிராமத்தில் பெண்ணை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் மாரியம்மாள் என்ற பெண்ணை கட்டுவீரியன் பாம்பு நேற்று இரவு கடித்து விட்டது. இந்த நிலையில் பாம்பு கடித்த பெண்ணை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர பாதை இல்லை.



இதன் காரணமாக இயற்கையான முறையில் பசுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் பகுதியில் ஒரு சில நேரங்களில் காட்டு யானைகள் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் குழிபட்டியில் இருந்து உடுமலைக்கு வர தற்பொழுது காடம்பாறை ஆழியாறு ஆனைமலை வழியாக வந்தால் சுமார் 3 மணி நேரம் ஆகிறது.

ஆனால் குழிப்பட்டியில் திருமூர்த்தி மலைக்கு வனப்பகுதியில் பாதை அமைத்து கொடுத்தால் ஏராளமான மலைவாழ் மக்கள் உயிர்கள் காப்பாற்றப்படும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிப்பட்டி மாவடைப்பு உள்ளிட்ட மலை கிராமமக்கள் உடுமலைக்கு எளிதாக வர சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...