துடியலூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் திடீர் தீ விபத்து!

கோவை துடியலூர் காவல் நிலையம் அருகே குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறை மூலம் தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: துடியலூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலையம் அருகில் உள்ள சந்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில் இன்று வாரச்சந்தை தொடங்க இருந்த நிலையில் அதிகாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செவர்லட் காரின் முன்பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.



தீ மலமலவென எரியவே அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.



இதையடுத்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வந்த 5 தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் அங்கிருந்த குப்பைகளுக்கு யாராவது தீ வைத்து அது காரில் பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...